இன்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

இன்று அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், மத்திய மாநில அரசு வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனிடையே பிரதமர் மோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்வர்கள் ,விளையாட்டு பிரபலங்கள் மத்திய அமைச்சர்கள், அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழு தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.ஆனால் அனைத்துக்கட்சி நாடாளுமன்றக் குழு தலைவர்களுடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனையில் ஊரடங்கை நீட்டிக்க ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனவே இன்று  அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.