நாட்டில் கொரோனா நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்த உயர்மட்ட ஆய்வு கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
பிரதமர் அலுவலகத்தின் கூற்றுப்படி, தொற்றுநோய் மற்றும் தடுப்பூசி இயக்கம் தொடர்பான இந்தியாவின் தற்போதைய நிலைமையை சரி செய்ய இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மத்திய சுகாதார அமைச்சகத்தின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 34,973 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதிலிருந்து 37,681 பேர் மீண்டுள்ளனர். ஒரே நாளில் 260 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதில், கேரளாவில் 26,200 புதிய வழக்குகளும் 114 இறப்புகளும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியின் மூலமாக இதுவரை 72.37 கோடி தடுப்பூசி மருந்துகள் மக்களுக்கு இன்றுவரை செலுத்தப்பட்டுள்ளது. இந்த ஆலோசனையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், தடுப்பூசி குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…