34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!

திட்டங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக பிரதமர் மோடி 34 வது பிரகதி கூட்டத்திற்கு தலைமை தாங்ககினார்.

பல்வேறு திட்டங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் குறைகள் குறித்து இன்றைய கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. ரயில்வே அமைச்சகம், சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஆகியவற்றின் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.

சுமார் ஒரு இலட்சம் கோடி மதிப்பிலான இந்தத் திட்டங்கள், உத்தரப் பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, தில்லி, ஹரியானா, குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி ஆகிய 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் தொடர்புடையவையாகும்.

ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஜல்ஜீவன் இயக்கம் ஆகியவற்றைக் குறித்து நேற்று  பேசுகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்துடன் தொடர்புடைய குறைகளும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.