நடிகை டாப்ஸி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு தனது காரில் ஏறிச் வீட்டிற்கு செல்ல முயன்ற போது டாப்ஸியை ‘பப்பராஸி’ செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு அவரை போட்டோ எடுத்தனர். இதனால் கோபமடைந்த டாப்ஸி ‘இப்படி செய்யாதீர்கள்’ என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே காரில் ஏறிச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீடியோவில், நடிகை டாப்ஸி நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவுடன் இருந்த கூட்டத்தை பார்த்துவிட்டு கடவுளே. .கடவுளே.. என்னை தாக்கிவிடாதீர்கள் என்று கூறி கொண்டே தனது காரில் ஏற செல்கிறார். அப்போது அங்கிருந்த சில ஹாப்பி தீபாவளி என்று கூற, பதிலுக்கு டாப்ஸியும் சிரித்தபடி அனைவருக்கும் “தீபாவளி வாழ்த்துக்கள்” என்று கூறினார்.
பிறகு தனது காருக்குள் டாப்ஸி கதவை திறந்து உள்ளே சென்றார். காருக்குள் சென்ற பின், கிளம்புவதற்காக தன்னுடைய காரின் கதவை மூட முயன்றபோது, ஒரு புகைப்படக்காரர் அவளது படங்களைக் கிளிக் செய்யும் முயற்சியில் கதவை மூடவிடாமல் தடுத்தார்.
இதையும் படியுங்களேன்- அந்த விஷயத்தில் நான் ‘ரொம்ப வீக்’..! ஓப்பனாக பேசிய பிரபல இளம் நடிகை.!
இதனால் சற்று கடுப்பான டாப்ஸி, “தயவு செய்து இப்படி செய்தீர்கள்” என்று கடுமையாகத் தலையை ஆட்டியபடியே சொல்லிக்கொண்டே சென்றுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ
View this post on Instagram