பிரதமர் மோடியின் புகைப்படம் சர்ச்சைக்கு உள்ளான நிலையில் இது குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் விவகாரத்தில் நீண்ட நாட்களாக பிரச்சினை நிலவி வந்த நிலையில் அண்மையில் சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர்.இதனைத்தொடர்ந்து இரு நாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.இதற்கு இடையில் பிரதமர் மோடி லடாக் தலைநகரான லே பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு இந்திய ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.இதன் பின் கல்வான் பள்ளத்தாக்கில் காயமடைந்த இந்திய வீரர்களை பிரதமர் மோடி ராணுவ மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் விவாதத்தை கிளப்பியது.
இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,இந்த புகைப்படம் ஒரு மில்லியன் வார்த்தைகளுக்கு மதிப்பானது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வீரர்களை சந்தித்த புகைப்படத்தையும்,பிரதமர் மோடி சந்தித்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
C.V.Ananda Bose : மேற்கு வங்க ஆளுநருக்கு எதிராக பாலியல் புகார் பதியப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கொல்கத்தா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்க ஆளுநர்…
Finger nails-நம்முடைய நகங்கள் மூலம் நாம் உள் உறுப்புகள் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை பற்றி இப்பதிவில் அறியலாம். நகம் என்பது நம்முடைய விரல் நுனிகளை பாதுகாக்கும் கவசமாகும்.…
Madonna Sebastian : பிரேமம் படத்தில் நடித்தபோது போஸ்டரில் கூட வரமாட்டீர்கள் என்று படக்குழு கூறியதாக மடோனா செபாஸ்டியன் தெரிவித்துள்ளார். பிரேமம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு…
Types of Duck Out : கிரிக்கெட்டில் நமக்கு தெரிந்த ஒரு சில டக் அவுட்களையும் தாண்டி பல பெயர்களில் பல வித டக் அவுட் இருக்கிறது…
Kollam Express : ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த கர்ப்பிணி கஸ்தூரியின் பிரேத பரிசோதனையில் அவருக்கு 7 மாத ஆண் குழந்தை வயிற்றில் இருந்தது தெரியவந்தது. சென்னையில்…
Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய…