5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசி – எஃப்டிஏ அனுமதி..!

5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் தடுப்பூசி மருந்தை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது.

மில்லியன் கணக்கான பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஃபைசர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ துறைக்கு ஃபைசர் நிறுவனம் அனுப்பிய விண்ணப்பத்தில்,இதுவரை  5 – 11 வயதுக்கு உட்பட்ட 2,000 க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும்,குழந்தைகளுக்கு இதுவரை எந்தவிதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை எனவும்,அதனால் 5 – 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த அமெரிக்க அரசு தங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தது.

இந்நிலையில்,5 முதல் 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கான ஃபைசரின் லோ-டோஸ் ஜப் கொரோனா தடுப்பூசியை எஃப்டிஏ அங்கீகரித்துள்ளது.

குழந்தைகளுக்கான தடுப்பூசி அளவு:

குழந்தைகளுக்கான டோஸ்களை – டீன் ஏஜ் மற்றும் பெரியவர்களுக்கு வழங்கப்படும் தொகையில் மூன்றில் ஒரு பங்கு செலுத்த அவசரகால பயன்பாட்டிற்காக எஃப்டிஏவால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தடுப்பூசியைப் பெறத் தொடங்கும் முன், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு கூடி, யார் அதைப் பெற வேண்டும் மற்றும் அதை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் குறிப்பிட்ட பரிந்துரைகளைச் செய்ய கூடும். குழு தற்போது நவம்பர் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து,நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் நோய்த்தடுப்பு ஆலோசனைக் குழு(CDC) அதன் முடிவை வெளியிட்டதும், தகுதியான குழந்தைகளுக்கு மூன்று வார இடைவெளியில் இரண்டு ஷாட்கள் போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,நவம்பர் மாதம் முதல் ஏறத்தாழ 28 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.