திறந்த வெளியில் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த அனுமதி – உத்தர பிரதேச அரசு!

திறந்த வெளியில் திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை நடத்த உத்தர பிரதேச அரசு அனுமதி அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது வரை தொடர்ந்து கொண்டே தான் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அவ்வப்போது கொரோனா தொற்று குறைந்துள்ள சில மாநிலங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. தற்பொழுதும் உத்தர பிரதேச மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளது.

இதனை அடுத்து திருமணங்கள் மற்றும் பிற நிகழ்வுகளை திறந்தவெளியில் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருமணங்கள் நடத்தப்படும் இடங்களை பொருத்தே நபர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திறந்தவெளி திருமணங்களிலும் முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

author avatar
Rebekal