சுங்கசாவடி ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டம்.! தமிழக அமைச்சர் நேரில் ஆதரவு.!

பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கசாவடியில் ஊழியர்கள் மூன்றாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ஆதரவு தெரிவித்துளளார். 

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது திருமாந்துறை சுங்கச்சாவடி. இந்த சுங்க சாவடி தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.

கடந்த மாத இறுதியில் இந்த தனியார் நிறுவனம் , சுங்க சாவடியில் வேலைபார்த்த சுமார் 30 பேரை முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்ததாக தெரிகிறது. இதனை தொடர்ந்து, மீதம் உள்ள ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்கள் அந்த சுங்கச்சாவடியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த சுங்க சாவடியில் வாகனங்கள் கட்டணமின்றி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். மேலும், இன்று மாலை, தொழிலாளர் நல ஆணையர் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment