பத்ம விருதிற்கு பிரபலம் அடையாதவர்கள் பெயரை பரிந்துரைக்கலாம்-பிரதமர் மோடி..!

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதிற்கு பிரபலம் அடையாத பெயர்களை பரிந்துரைக்கலாம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த 1954 ஆம் ஆண்டு முதல் குடியரசு தினத்தன்று பல்வேறு துறைகளில் தனது திறமையை வெளிப்படுத்தும் சிறந்த நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. தற்போது இதுகுறித்து பிரதமர் மோடி, பத்ம விருதுகளுக்காக சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களை மக்களே பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது,

களப்பணியில் தன்னிகரற்ற சிறப்பான செயல்களை பலரும் வெளிப்படுத்தினர். அவர்கள் குறித்து நாம் அறிந்ததில்லை என்பதால் சாதிக்க உத்வேகம் அளிக்கக்கூடிய ஏராளமான திறமைகளை கொண்டுள்ள நபர்களை பற்றி உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் மக்கள் பத்ம விருதிற்கு பரிந்துரைக்கலாம். செப்டம்பர் 15 ஆம் தேதி வரை padmaawards.gov.in  இணையதளத்தில் பரிந்துரைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.