3 வது அணிக்கான தகுதியை மக்கள் நீதி மைய கட்சி பெற்று விட்டது – கமலஹாசன்!

3 வது அணிக்கான தகுதியை மக்கள் நீதி மைய கட்சி பெற்று விட்டது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மைய கட்சி மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்  தலைமையில் நடைபெறுகிறது.சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் இன்று 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் கமலஹாசன் அவர்கள் பேசினார்.

அவர் பேசுகையில், மக்கள் நீதி மையம் மூன்றாவது அணிக்கான தகுதியை பெற்றுவிட்டதாக கூறியுள்ளார். மேலும், தற்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் கோடிக்கணக்கில் தான் சம்பாதிப்பது உண்மை தான் எனவும் கூறிய அவர், இல்லை என்று பொய் செல்ல மாட்டேன். அவ்வாறு கூறினால் சக நடிகர்களை கிண்டலடிப்பது போல இருக்கும் எனவும், அவர்கள் ஆரோக்கியமாக, நன்றாக இருக்கட்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், என்னை வாழவைத்தவர்களிடமே எனது வாழ்வாதாரத்தையும் கொட்டுவேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

author avatar
Rebekal