செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் இன்று மாலை நீர் திறப்பு.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.
இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், திருவள்ளூர் புழல் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.