மக்களே எச்சரிக்கை..! செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில் நீர் திறப்பு…!

செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரியில்  இன்று மாலை நீர் திறப்பு. 

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், திருவள்ளூர் புழல் நீர்த்தேக்கத்தில் நீர்வரத்து 2000 கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு வெல்ல அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment