மக்களே எச்சரிக்கை..! தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை…!- இந்திய வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

தமிழகத்தில் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28-ஆம் தேதி  நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது.

இந்நிலையில்,  அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் கடலோரப்பகுதி, உள்மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.