மக்கள் இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு தடை! புதுச்சேரி முதல்வர் அதிரடி!

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. தற்போது இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டோர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா எதிரொலியால், புதுச்சேரி முதர்வர் நாராயணசாமி, நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதால் போர்க்கால நடவடிக்கையாக ஊரடங்கு  போடப்பட்டுள்ளது.’ என தெரிவித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் மக்கள் இருசக்கர வாகனங்களில்  தடை விதிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.