தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு அபராதம் விதிப்பு..!

தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவு. 

கடலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் திடீரென்று கடலூர் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையில் தமிழில் பெயர் பலகை வைக்காத 42 கடைகளுக்கு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், முறையான இருக்காய் வசதி இல்லாத வணிக நிறுவனம் உட்பட 16 கடைகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.