வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக தமிழக சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அவரது விளக்கத்தை ஏற்க மறுத்து பேரவையிலிருந்து திமுக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லீம் அமைப்புகள் போராட்டம் நடத்தியது.இந்த போராட்டத்தில் ,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தினார்கள்.இந்த தாக்குதலை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில்,எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வண்ணாரப்பேட்டை சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசினார்.அவர் பேசுகையில், போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் .தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்.அமைதியான போராட்டத்தில் தடியடி நடத்த தூண்டியது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னர் வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி பேரவையில் விளக்கம் அளித்தார்.அவர் பேசுகையில், அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பலர் போராட்டம் நடத்தினர் .பேருந்துகள் மீதும் காவலர்கள் மீதும் கல் மற்றும் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டது.வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் முதியவர் இறந்ததாக வதந்தி பரப்பி மாநிலம் முழுவதும் போராட்டத்தை தூண்டிவிட்டுள்ளனர் என்று பேசினார்.ஆனால் முதலமைச்சரின் விளக்கத்தை ஏற்க மறுத்து திமுக ,காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது.
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…
Varun Chakravarthy : நேற்றைய போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் மிஸ்ட்ரி ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி வெற்றி பெற்றதை பற்றி பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின்…