நாளை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை..!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை பெகாசஸ் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளனர்.

ஜூலை 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் தொடர்ந்து 13 ஆவது நாளாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெகாசஸ் பிரச்சனை குறித்து விவாதிக்க  வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நாளை காலை 10 மணியளவில் மாநிலங்களவை மற்றும் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இதில் அடுத்த 5 நாட்களுக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் ராகுல் காந்தியும் கலந்துகொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.