சென்னை கொண்டித்தோப்பு பகுதியை சார்ந்தவர் கோபால் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மனைவி சுமித்ரா.இவர்களுக்கு அபிமன்யு என்ற ஒரு மகன் உள்ளார்.நேற்று கோபால் தனது மகன் மற்றும் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் கொருக்குப் பேட்டையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பி வந்தனர்.
கொருக்குப் பேட்டை மீனாம்பாள் நகர் மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்த போது காற்றில் இருந்து பறந்து வந்த மாஞ்சா நூல் இருசக்கர வாகனத்தில் முன் உட்காந்து இருந்த அபிமன்யு கழுத்தில் வெட்டியது.
உடனே அபிமன்யுவை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அபிமன்யுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.இது குறித்து ஆர்.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் மாஞ்சா நூலால் ஏற்பட்ட உயிர் இழப்புகளை தொடர்ந்து மாஞ்சா நூல் மற்றும் காத்தாடிக்கு அரசு தடை விதித்து உள்ளது.ஆனாலும் மாஞ்சா நூலால் குழந்தை அபிமன்யு இறந்தது அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…