PAKvsSL: மழையால் பாகிஸ்தான் ரசிகர்களின் 10 வருட கனவு வீணானது ..!

பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெற இருந்தது.

ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் தற்காலிகமாக டாஸ்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பெய்த தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள்  ஏமாற்றத்துடன் சென்றனர்.

மேலும் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அங்கிருந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சில வீரர்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என மாற்ற அணிகள் மறுப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கை அணி ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தானில் விளையாடியது.ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு இதுவரை ஒருநாள் போட்டி அங்கு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan