ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகளை ஒப்படைக்க ஆணை…! ஆட்சியர் அதிரடி உத்தரவு..!

ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க உத்தரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவையடுத்து இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்-27ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் எனதேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனையடுத்து, இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தி விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உண்ணி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் துப்பாக்கிகள் வைத்துள்ள உரிமையாளர்கள் அவற்றை ஒப்படைக்க உத்தரவு சம்மந்தப்பட்ட காவல்நிலையம் அல்லது உரிமம் பெற்ற தனியார் ஆயுத கிடங்கில் ஒப்படைக்க வேண்டும்; துப்பாக்கிகளை ஒப்படைக்கத் தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment