நடிகர் சூர்யா – நடிகை ஜோதிகா ஒருவரும் திருமணம் முடிந்த பிறகு 2013 ஆம் ஆண்டு 2டி என்டர்டெயின்மென்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள். இரு குழந்தைகளான தியா மற்றும் தேவ் ஆகியோரின் முதல் எழுத்துக்களை கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் இதுவரை பல நல்ல படங்களை தயாரித்து வருகிறது.
இந்த நிறுவனம் தயாரிப்பில் கடைசியாக வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம், கார்கி ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது வணங்கான் எனும் திரைப்படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், 2 டி நிறுவனம் தயாரிக்கவுள்ள அடுத்த புதுப்படத்தில் பணிபுரிய ஆர்வம் கொண்ட துணை இயக்குனர்கள் தேவை என அறிக்கை வெளியீட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ” 2D நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பணிபுரிய ஆர்வமும் திறணும் கொண்ட துணை இயக்குனர் தேவை. குறைந்தது மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள, ஆண்பெண் தேவை. நவம்பர் 15-ந்தேததிக்குள், [email protected] என்ற மின்னஞ்சலுக்கு தன்விவர முகவரியை அனுப்பவேண்டும். உரிய பரிசீலணைக்கு பிறகு நேர்முக உரையாடலுக்கான அழைப்பு வரும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
View this post on Instagram