ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அவகாசம்.!

ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் .

காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குறித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உள்ளது.

கொரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால தாமதம் ஆகிறது. வழக்கு விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதாக  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan