கல்விக்கட்டணம் கட்ட மாணவர்களுக்கு அவகாசம்…அண்ணா பல்கலை அறிவிப்பு

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான அவகாசத்தை நீட்டித்து அண்ணா பல்கலைகழகம்  அறிவித்துள்ளது.

மாணவர்கள் கல்விக்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் அக். 29ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாக கல்லூரி மாணவர்களுக்கு 3வது முறையாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. செப்.,9 வரை கெடு விதிக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்கள் இவ்விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் சென்றதால் அக்.,9வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.



author avatar
kavitha