இன்று சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்கிறார்.
தமிழக சட்டப்பேரவை இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் அவையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் நாளை வரை ஆளுநர் உரை மீதான விவாதம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி முதல் நாள் பேரவை கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இதில், மறைந்த உறுப்பினர்கள், பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஜனவரி வரை 22 சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு பேரவைத் தலைவர் தனபால் வாசித்தார்.
இதன் பின்னர் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றும் விதமாக உறுப்பினர்கள் சிறிது நேரம் அமைதி காத்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டம் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இன்றும், நாளையும் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதம் மற்றும் முதல்வரின் பதிலுரை இடம் பெறுகிறது.
இந்நிலையில், 3-வது நாளாக இன்று சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று 2 முக்கிய சட்ட மசோதா கொண்டுவரப்படுகிறது. அதில் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவை முதலமைச்சர் இன்று தாக்கல் செய்கிறார். அதேபோல மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களின் பதவியை வரும் ஜூன் வரை நீட்டிக்கும் மசோதாவை அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்கிறார்.
இந்த கூட்டுத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று கொண்டதால் பல விவாதங்கள் நடைபெறும். ஆனால் கூட்டத்தொடரை ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளதால் கூட்டுத்தொடரில் விவாதங்கள் அதிகம் நடைபெறாது. கடந்த ஆண்டு நவம்பர் மாதமே தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து அவரச சட்டத்தை பிறப்பித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…