காவேரி மேலாண்மை ஆணைய புதிய தலைவராக அருண்குமார் சின்கா நியமனம்!

காவேரி மேலாண்மை வாரியத்தின் தலைவராக இருந்து வந்த மசூத் ஹுசைன் அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் முடிந்தது . இதையடுத்து , காவேரி மேலாண்மை வாரியத்தின் புதிய தலைவராக அருண்குமார் சின்கா அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகம், கேரளா, கர்நாடகம், புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களில் நதிநீரை பங்கீட்டிக்கொள்ள காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி ஒழுங்கற்று குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.  மாநிலங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு பிரச்னைகளை தீர்த்து வைப்பது இவர்களது வேலையாகும்.

தற்போது புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அருண்குமார் சின்கா அவர்கள் இனி வரும் காலங்களில் காவேரி மேலாண்மை கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் இவர் இருப்பார் .