கையில் தாலி.. மேள தாளங்களுடன் புறப்பட்ட இந்து மக்கள் கட்சியினர்.!

காதலர் தினத்தன்று யாரேனும் ஜோடியாக திரிவதை கண்டால் அவர்களுக்கு திருமணம் நடத்தி வைக்க கையில் தாலி மற்றும் மேள தளங்களுடன் ஊர்வலம் வந்த கும்பகோணம், இந்து மக்கள் கட்சியினர். 

இன்று உலகம் முழுக்க பிப்ரவரி 14 –  காதலர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. வயது வித்தியாசமின்றி பலரும் தங்கள் ஜோடிகளோடு தங்கள் காதலர் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதே போல் இந்த காதலர் தினத்திற்கு நமது நாட்டில் சில எதிர்ப்புகளும் எழுவதுண்டு.

அவர்கள் காதலர் தினத்தின் பெயரை கொண்டு பலர் பொது இடத்தில் அத்துமீறி செயல்படுவதாகவும், அதனை எதிர்ப்பதாகவும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அப்படி ஒரு எதிர்ப்பை தான் இன்று இந்து மக்கள் கட்சியினர் செய்துள்ளனர்.

அதாவது, கும்பகோணத்தில் உள்ள இந்து மக்கள் கட்சியினர் மேற்கத்திய காதலர் தின கலாச்சாரத்தை எதிர்ப்போம் என கூறி, கையில் தாலி, மேள தளங்களுடன் ஊர்வலம் வந்துள்ளனர்.  அப்போது யாரேனும் காதல் ஜோடிகள் ஒன்றாக வருவதை கண்டால் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் ஊர்வலம் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment