ரூ.8500 – 9000 கோடி.! மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம்.! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு.!

சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக பட்ஜெட்  கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2023-2024 க்கான பட்ஜெட் உரையை வாசித்து வருகிறார்.

பட்ஜெட் அறிவிப்புகள் :

இதில், மாற்று திறனாளிகளுக்கு ஓய்வூதிய திட்டம், காலை உணவு திட்டம் , சென்னையில் சர்வதேச விளையாட்டு மையம், மகளிர் சுயஉதவி குழுக்கள் கடன் உதவி, பெண் தொழில் முனைவோருக்கு சிறப்பு திட்டம், ராணுவ வீர்களுக்கான இழப்பீடு தொகை அதிகரிப்பு என பல்வேறு திட்டங்களையும், அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் நிதியமைச்சர் அறிவித்து வருகிறார்.

மெட்ரோ ரயில் திட்டம் :

அதேபோல, சென்னையை தொடர்ந்து, கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதில் கோவையில் ரூ.9,000 கோடி ருபாய் செலவிலும், மதுரையில் 8,500 கோடி ருபாய் செலவிலும் மெட்ரோ ரயில் சேவை அமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment