“நிச்சயமாக..சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” – பிரேசில் அதிபர்!

சீனா கண்டுபிடிக்கும் கொரோனா தடுப்பூசியை நாங்கள் வாங்கமாட்டோம் என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார்.

சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பல நாடுகளில் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமடைந்துள்ளது. அதற்கான இறுதி கட்ட சோதனைக்கு விரைந்துள்ளனர். மேலும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி விரைவில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது.

இன்னும் சில மாதங்களில் இந்த தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உலக நாடுகள் எதிர்பார்த்து உள்ளன. உலக அளவில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தடுப்பூசி பரிசோதனை மருத்துவ பரிசோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளன. உலக நாடுகளை தொடர்ந்து, கொரோனா வைரஸை பரப்பிய சீனாவும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்தநிலையில், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப்போவது இல்லை என பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனரோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்தில் ஒருவர், சீனா தயாரிக்கும் கொரோனா தடுப்பூசியை வாங்க வேண்டாம் என வலியுறித்தி ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். இதற்கு பதிலளித்த பிரேசில் அதிபர், “நிச்சயமாக, சீனாவின் தடுப்பூசியை வாங்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.