அல்-கொய்தாவால் புரிந்து கொள்ள முடியாது ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்து கொள்வார்கள்: அசாம் முதல்வர்

இந்தியாவில் நடந்து வரும் ஹிஜாப் விவகாரம் குறித்து அல்-கொய்தா தலைவர் அய்மன் முகமது ரபி அல்-ஜவாஹிரி கணடனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் செய்தியாளர் ஒருவருக்கு பதிலளித்த அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அல்-கொய்தா ஒருபோதும் புரிந்து கொள்ளாது, ஆனால் இந்திய முஸ்லிம்கள் புரிந்துகொள்வார்கள்” என்று கூறினார்.

அல்-கொய்தா தலைவர், செவ்வாயன்று வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், இஸ்லாம் மீதான தாக்குதலை “அறிவுபூர்வமாக, ஊடகங்களைப் பயன்படுத்தி மற்றும் போர்க்களத்தில் ஆயுதங்களைக் கொண்டு” போராடுமாறு முஸ்லிம்களை வலியுறுத்திருந்தார்.

அனைத்து மாணவர்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்காகவே கல்வி நிறுவனங்களில் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன, ஆனால் அல்கொய்தா அதை புரிந்து கொள்ளாது என்று பாஜக மூத்த தலைவர் கூறினார்.

author avatar
Dinasuvadu Web