எய்ம்ஸ் கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை – ஸ்டாலின் தாக்கு!

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டையில் “தமிழகம் மீட்போம்” என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்பொழுது உரையாற்றிய அவர், மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்போவதாக அறிவிக்கப்பட்டு, தற்பொழுது வரை இன்னும் ஒரு செங்கல் கூட வைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், மக்களை ஏமாற்றுவதற்காக எய்ம்ஸ் நிர்வாகக் குழுவை அமைந்துள்ளதாக கூறினார். தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளாததால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என குறிப்பிட்ட ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து பொய் கணக்கை காட்டி வருவதாகவும், அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா பயத்தை வைத்து படம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.