ஒருநாள் முன்னதாகவே தொடங்கியது வடகிழக்கு பருமழை- வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை அக்டோபர் 17ம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.ஆனால்  தமிழகத்தில் ஒரு நாள் முன்னதாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.தற்போது  தமிழகம், புதுவை, கேரளா, கர்நாடகா, தெற்கு ஆந்திரா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று   வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் இன்று துவங்கியுள்ளது.