தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகளும் அளிக்கப்படும் எனவும், கொரோனா தொற்று அதிகமுள்ள 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தடைகள் தொடரும் எனவும் கூறினார்.
இந்நிலையில், மாவட்டங்களுக்குள் பயணிக்க இ-பாஸ் அனுமதி தேவையில்லை எனவும், வெளிமாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் அனுமதி பெறுவது கட்டாயம் என முதல்வர் அறிவித்தார். மேலும், அரசுப்பணி மற்றும் தனியார் நிறுவன வேலைகளுக்கு செல்ல அரசு / தனியார் பேருந்துகளில் 20 நபர்கள் செல்லலாம் எனவும், வேன்களில் 7 நபர் மட்டுமே செல்லலாம் என கூறினார்.