கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை.. ஆர்பிஐ ஆளுநர் அறிவிப்பு!

கடன்களுக்கான (ரெப்போ வட்டி) விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக தொடரும் என தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ், ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாறுதல் இல்லை.

நடப்பு நிதியாண்டு தொடக்கத்தில் இருந்தே ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. நடப்பு நிதியாண்டில் 4-ஆவது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம் 6.50% ஆக நீடிக்கிறது. பண்டிகை காலங்கள் தொடங்கியுள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை தொடரும்.

நாட்டில் பணவீக்கத்தை 4% க்குள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 7.3 சதவீதமாக இருந்த மொத்த பணவீக்கம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 4.6 சதவீதமாக குறைந்துள்ளது. CPI பணவீக்கம் 2023-24 க்கு 5.4% ஆகவும், 2வது காலாண்டில் 6.4% ஆகவும், Q3 இல் 5.6% ஆகவும் மற்றும் Q4 இல் 5.2% ஆகவும் இருக்கும். எல்லா காரணிகளையும் கருத்தில் கொண்டு, நடப்பு 2023-24 நிதியாண்டின் உண்மையான GDP வளர்ச்சி 6.5% என்று கணிக்கப்பட்டுள்ளது.

2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான ஜிடிபி வளர்ச்சி 6.6% ஆக இருக்கும் என்றார். எனவே, குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றப்படாததால் வங்கிகள் வழங்கும் வீடு, வாகனம், தனிநபர் கடன்களில் மாற்றமிருக்காது எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு நிதியாண்டின் 2023-24 முதல் காலாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த ஆண்டை விட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1% ஆக குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்