புகைப்படங்களை வெளியிட்டு சர்சையில் சிக்கிய நிவேதா பெத்துராஜ்

  • நடிகை நிவேதாபெத்து ராஜ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.
  • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின்  பாதுகாப்பு கருதி கோவிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது  புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது. 

நடிகை நிவேதா பெத்து ராஜ் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் “ஒரு நாள் கூத்து”, “திமிரு பிடிச்சவன்”, டிக் டிக் டிக், “பொதுவாக என் மனசு தங்கம்” ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.தமிழ் சினிமாவில் இவருக்கு மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

நடிகை நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற போது  புகைப்படம் எடுத்துள்ளார்.அந்த புகைப்படங்களை  இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது பெரும் சர்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பாதுகாப்பு கருதி கோவிலுக்குள் செல்போன்கள் அனுமதிக்க கூடாது என்று நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நடிகை நிவேதாராஜ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செல்போன் பயன்படுத்திய சம்பவம் குறித்து தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுந்துள்ளது.இதையடுத்து  அந்த  புகைப்படங்களை நிவேதா உடனே முகநூலில் இருந்து அகற்றிவிட்டார்.இது குறித்து விசாரனை நடத்தப்பட வேண்டும் என்று தற்போது பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Leave a Comment