திரிபுராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – மாநில அரசு

திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திரிபுராவில் நாளை முதல் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. திரையரங்குகள், விளையாட்டு அரங்குங்கள், பொழுதுபோக்கு பூங்கா ,பார்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி என்று கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அதன்படி, கொரோனா பரவலை தடுப்பு வகையில் மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் திரிபுராவில் நாளை முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்