கடந்த ஆண்டு முழுவதும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குஜராத் அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி, நேற்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப்பிலும் முக்கிய நகரங்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.