பஞ்சாப்பில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..!

கடந்த ஆண்டு முழுவதும் தீவிர அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா பாதிப்புகள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குறைந்து காணப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா தீவிரம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றுகளால் இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக குஜராத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால்  கொரோனா தொற்றை கட்டுப்படுத்த குஜராத் அரசு இரவு ஊரடங்கை அமல்படுத்தியது. இதன்படி, நேற்று முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், பஞ்சாப்பிலும் முக்கிய நகரங்களில் இரவு 9 மணியில் இருந்து காலை 5 மணிவரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan