மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதனை அடுத்து, இங்கிலாந்தில் தற்போது புதிய வகை வைரஸ் பரவி வருவதால், இந்த புதிய வகை வைரசின் வடிவம் குறித்து, விவாதிப்பதற்காக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அவசரக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்குப் பின் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், புதிய கொரோனா வைரஸ் குறித்து அரசு முழுமையான எச்சரிக்கையுடன் உள்ளது. மக்கள் இந்த வைரஸ் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேலும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைத்து பயணிகளையும் இன்று முதல் 31ஆம் தேதி வரை 7 நாட்கள் தனிமைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த ஒரு வாரமாக வெளிநாடுகளிலிருந்து வந்த பயணிகளின் பட்டியலை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, இன்று முதல் ஜனவரி 5ஆம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து மகாராஷ்டிரா வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
IPL 2024 : இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ அணி மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரின் 48வது போட்டியாக இன்று லக்னோ…
BCCI : டி20 உலகக்கோப்பைக்கான பிசிசிஐ அறிவித்துள்ள இந்திய அணியை ரசிகர்கள் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை…
Israel : தெற்கு காசாவில் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என அந்நாட்டு பிரதமர் நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார். இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸ் அமைப்பினரை முழுதும் அழிக்கும் வரையில்…
Gp Muthu : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகியது பற்றி ஜிபி முத்து பேசியுள்ளார். குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி பெரிய…
T20 World Cup 2024: டி20 உலக கோப்பை தொடருக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. ஐபிஎல் தொடர் முடிந்த உடனே டி20 உலகக்கோப்பை…
Bird Flu : இந்தியாவில் பரவும் பறவை காய்ச்சல் தொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் மட்டும்மல்லாது உலகில் ஒரு சில நாடுகளில்…