இலங்கை அமைப்புடன் தமிழக இளைஞர் தொடர்பு.? சிவகங்கையில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை.!

சேலத்தை தொடர்ந்து, சிவகங்கையில் விக்னேஷ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். தடை செய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பு இருபப்தாக எழுந்த சந்தேகத்தின் பெயரின் இந்த சோதனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

இன்று காலை சேலம் பகுதியில் யூ-டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய் பிரகாஷ் ஆகியோர் தற்போது சேலம் மத்திய சிறையில் இருக்கின்றனர்.

அவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என  அவர்கள் தங்கியிருந்த சேலம் செட்டிச்சாவடி ஊரில் உள்ள வாடகை வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதே போல, சிவகங்கையில் கல்லூரி சாலையில் வசிக்கும் விக்னேஷ் என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று சோதனை  செய்து உள்ளனர். இவர் அண்மையில் இலங்கை சென்று வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும், இலங்கையையில் தடை செய்யப்பட்ட அமைப்புடன் விக்னேஷிற்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்ததை அடுத்து இந்த சோதனை நடத்தப்படுவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவரது வீட்டில் சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.

=

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment