புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் – ரிசர்வ் வங்கி தகவல்.!

நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் எஸ் வங்கியை, ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இதையடுத்து எஸ் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் எஸ் வங்கியுடன் கூட்டு வைத்திருந்த போன்பே சேவை பாதிப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், யெஸ் வங்கி தொடர்பாக ரிசர்வ் வங்கியுடன் தான் தொடர்ந்து தகவல்களை கேட்டறிந்து வருவதாகக் குறிப்பிட்டார். 

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யெஸ் வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் ரிசர்வ் வங்கி எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்தார். எஸ் வங்கி தொடர்பாக வரைவுக் கொள்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில் யெஸ் வங்கியில் முதலீடு செய்துள்ளவர்களின் பணம் பாதுகாப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வங்கியை நிர்வகிக்க புதிய குழு விரைவில் அறிவிக்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்