கர்நாடகா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது – அமைச்சர் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.

இதனை தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் அவர்கள்  முல்லைப் பெரியாறு பிரச்சினையை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கேரளாவை விட விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருப்பது கர்நாடகா. காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதிக்காத போக்கு நிலவுகிறது.

கர்நாடகாவிடம் நாங்கள் யாசகம் கேட்கவில்லை. நீரை தான் கேட்கிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது நமது உரிமையை அடகு வைப்பதாகிவிடும். கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது. கர்நாடகாவிடம் ஒரு கை அளவு நீர் இருந்தாலும் அதில் தமிழகத்தின் பங்கு உண்டு. கர்நாடக அணையில் தண்ணீர் இருப்பதால் தான் நான் கேட்கிறோம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.