கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
நீட் தேர்வு என்றாலே தமிழகம் முழுவதும் ஒரு தரப்பினர் அதற்கு ஆதரவு தெரிவித்த்தும் மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.குறிப்பாக நீட் தேர்வில் தோல்வி அடைந்து மருத்துவ இடம் கிடைக்காததால் அரியலூரில் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.எனவே நீட் தேர்வால் தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றது.
நேற்று முன்தினம் நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். இந்த தேர்வு தமிழ், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது. அதேபோல் தமிழகத்தில் 14 நகரங்களில் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.
இந்நிலையில் கோவையில் உள்ள ஒரு பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவருக்கு காவலர் ஒருவர் உதவி செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார்.
கோவையில் உள்ள ஒரு பள்ளியிலும் நீட் நுழைவுத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்து.இங்கு மாணவர் ஒருவர் தேர்வு எழுத வந்தார்.ஆனால் அவரிடம்புகைப்படம்இல்லாத காரணத்தால் அவர் அவர் தேர்வு அறைக்கு உள்ளே அனுமதிக்கப்படவில்லை.செய்வதறியாமல் மாணவர் அங்கும் இங்கும் சுற்றிக்கொண்டிருந்தார்.இதை அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் பார்த்தார்.உடனே அந்த மாணவனை அழைத்து அவரிடம் காரணத்தை கேட்டார்.பின்னர் அவர் தன்னிடம் இருந்த ரூ.40-ஐ எடுத்து கொடுத்தது மட்டும் அல்லாமல் ,அந்த மாணவனுக்கு தேர்வு எழுத அனுமதி ஏற்படுத்தியும் கொடுத்தார்.காவலர் செய்தது சிறிய உதவியாக இருந்தாலும் உரிய நேரத்தில் அந்த மாணவனுக்கு உதவியதை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.இந்த அருமையான செயலை செய்த காவலரின் பெயர் சரவணக்குமார் ஆகும்.நீங்களும் இந்த காவலரின் உதவியை வாழ்த்த விரும்பினால் வாழ்த்துங்கள்…
Andhra pradesh: ஆந்திராவில் ரூ.2,000 கோடி பணத்துடன் சென்ற 4 கண்டெய்னர்கள் பிடிபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதால் பறக்கும்…
Indian Team : டி20 அணியை அறிவித்த பிறகு இந்திய அணியில் இடம்பெற்றுள்ள சில வீரர்கள் அடுத்தடுத்து ஐபிஎல் போட்டியில் சொதப்பி வருவதால், ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர். வருகிற…
Prajwal Revanna : கிருஷ்ணரின் சாதனையை முறியடிக்க பிரஜ்வல் ரேவண்ணா முயற்சித்துள்ளார் என கர்நாடகா காங்கிரஸ் அமைச்சர் சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி…
Annamalai Biopic : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் வாழ்கை வரலாற்று படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் விஷால் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்,…
Weather Update : அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வெயில் வாட்டி…
முருங்கைக்காய் கிரேவி- முருங்கைக்காய் கிரேவி செய்வது எப்படி என்று பதிவில் காண்போம். தேவையான பொருட்கள் : முருங்கைக்காய் =3 வெங்காயம்=2 தக்காளி =2 சீரகம்=1 ஸ்பூன் எண்ணெய்…