சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை!

சென்னை-ஜெய்ப்பூர் இடையே தினசரி ரயில் இயக்க மத்திய ரயில்வே அமைச்சருக்கு எம்.பி.தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில், அவர்கள் தங்களின் மாநிலத்திற்கு சென்று வர, சென்னை-ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு தினசரி ரயில் இயக்க மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல்க்கு தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து கடிதம் எழுதியுள்ள அவர், சென்னை நகரில் ராஜஸ்தானை தொழிலாளர்கள் வசித்து வருவதாகவும், அவர்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்ல வாரத்துக்கு 3 முறை மட்டுமே ரயில் இயக்கப்படுகிறது என கூறினார். இதன்காரணமாக சென்னை-ஜெய்ப்பூர் மற்றும் ஜோத்பூருக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.