நயன்தாரா, விக்னேஷ் சிவனை கைது செய்ய காவல் ஆணையரகத்தில் புகார்!

நயன்தாரா, விக்னேஷ்சிவன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் காவல் ஆணையரகத்தில் புகார்.

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தையும் தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கண்ணன் என்பவர் புகார் அளித்துள்ளார். ரவுடிகளை ஊக்குவிக்க ரவுடி பிக்சர்ஸ் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்