தேசிய இளையோர் தடகள போட்டியில் வேலூர் மாணவி தங்கம்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மடையப்பட்டு கிராமத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவரது மகள் ஹேமமாலினி. இவர் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்த 33வது தேசிய இளையோர் தடகள போட்டியில் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் களமிறங்கிய இவர் 42.58 மீட்டர் தூரம் எரிந்து முதலிடம் பிடித்தார். 

இவர் கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் தேசிய போட்டிகளில் பங்கேற்று 8 பதக்கங்களும், தென்னிந்திய அளவில் 4 pபதக்கங்களும், மாநில அளவில் 16 பதக்கங்களும் பெற்றுள்ளார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment