அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு -நாசா முன்னாள் விஞ்ஞானி

அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு  செய்துள்ளதாக   நாசா’ முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் தெரிவித்துள்ளார்.

நாகர்கோவிலில்  நாசா’ முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை நாசா உன்னிப்பாகவும், ஆர்வமாகவும் கவனித்து வருகிறது.

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது .அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா முடிவு  செய்துள்ளது என்று கூறியுள்ளார்.