சூர்யாவுடன் 20 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல நடிகர்..?

சூர்யாவின் 40 வது படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

நடிகர் சூர்யா தற்போது தனது 40 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். இசையமைப்பாளர் இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துவருகிறார். இந்த படத்தில் சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் முடித்து படத்தை அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி ஆயுத பூஜை அன்று வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான டைட்டில் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் சூர்யாவுடன் 20 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல நடிகரான ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நடிகர் ராஜ்கிரண் சூர்யாவுடன் கடைசியாக நந்தா படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.