மதிப்பெண் சான்றிதழ்களில் பெற்றோர் பெயர் – அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை விவாதத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் சான்றிதழில் மாணவர், பெற்றோர் பெயர் அச்சிடப்படும் என்று தெரிவித்தார். அதுபோல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் பெயர் மாற்றப்படுகிறது. அது தனியார் பள்ளிகள் இயக்குனரகம் என பெயர் மாற்றம் செய்யப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்