நாடோடிகள் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசிற்க்கு தயாராகி விட்டது. இந்த படத்தையும் இயக்குனர் சமுத்திரகனிதான் இயக்கியுள்ளார். சசிகுமார் நாயகனாக நடித்துள்ளார். பரணி கஞ்சா கருப்பு, அதுல்யா ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர், இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தின் ரிலீஸ் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி இப்படித்தான் இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதாவது பொது இடத்தில் ஒரு சமூக பிரச்சினையை எதிர்த்து சசிகுமார், பரணி ஆகியோர் சத்தம் போடுபவார்கள். அப்போது சுற்றி உள்ளவர்கள் எல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு கடந்து செல்வார்கள். உடனே பரணி, ‘நாம் அவர்களுக்காகத்தான் கத்திட்டு இருக்கோம். ஆனா இவங்க அத கண்டுக்காம அப்படியே போறாங்களே.’ என வருத்தப்படுவார். அதற்கு ,சசிகுமார், ‘கடந்து போறவங்க திரும்பிப் பார்க்கிற வரைக்கும் சத்தமா கத்தணும்.’ என கூறுவார். அப்படி தான் இந்த படத்தின் முதல் காட்சி இருக்கும் என இயக்குனர் சமுத்திரகனி கூறினார்.
Helicopter crash : மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் தரையிறங்கும் போது ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா பெண் தலைவர் சுஷ்மா…
Election2024: ரேபரேலி மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தலில் 2019ஆம் ஆண்டு போல இந்த முறையும் ராகுல் காந்தி…
Switzerland : சுவிட்சர்லாந்த் நாட்டில் புலம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டு மக்களுக்கு ஆதரவாக தற்போது சுவிட்சர்லாந்த் அரசு சட்ட திருத்தும் செய்ய போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதே…
Bhuvneshwar Kumar : ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட் எடுத்த புவனேஷ்வர் குமாரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் …
Weather Update: கத்திரி வெயில் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை பெய்யும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,…
Vijayakanth: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த் எந்த அளவிற்கு நல்ல மனிதர் என்பதனை பற்றி சொல்லியே…