எனக்கு மட்டும் ஏன்!? இப்படி நடக்குது..புலம்பாதீர்கள்..புண்ணியவனை வணங்கினால் புகழ் கிடைக்கும் வாழ்வு .!!

எல்லோரும் சட்டென்று நினைத்து ஏ எனக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது வாழ்க்கையில் எப்படி இருந்தேன் இப்ப இப்படி இருக்கேன் என மனதால் தினமும் நோகதீர்கள் வாழ்வை வசந்தம் உடையதாக மாற்றம் வல்லமை இவருக்கு உண்டு அவரை நினைத்து வணங்கினால் வாழ்வில் இறக்கமே கிடையாது ஏற்றம் தான் வாருங்கள் அறிவோம்.

அனைவரும் தங்களது வாழ்க்கையில் இப்படி ஆக வேண்டும் நான் இவ்வாறு ஆக வேண்டும் என்று நினைத்து இருப்பீர்கள்.ஒரு காலக்கட்டத்தில் எப்படி வாழ்ந்தோம் இப்பொழுது இவ்வாறு கஷ்டப்படுறோமே? பெரிய செல்வந்திராக இருந்தவர் இன்று கடனில் இருக்கலாம் இவ்வாறு திடீரென்று வாழ்க்கையானது மாறி நம்மை நிம்மதி இல்லாமல் செய்து இருக்கலாம் வாழ்க்கையில் ஏற்றம் இறக்கம் உண்டு.ஆனால் இறக்கம் ஆனது அடிமட்டத்திற்கு சென்றால் யார் தான் சமாளிக்க முடியும்.அவ்வாறு வாழ்க்கை ஆட்டம் காணாமல் இருக்க ஆடிக்கொண்டே கலைகளை அள்ளித்தரும் அந்த நடராஜ நாயகனை வணங்கினால் நம் வாழ்வி ஏற்றம் ஏற்படும் இது அனுபவத்தில் உணர்ந்தவர்கள் ஏராளாலம்.திருவாதிரை நட்சத்திர நாளில் சென்று நடராஜரை தரிசிக்க வேண்டும்.உடன் வெல்லத்தை நைவேத்தியமாக வைத்து வழிபட்டால் வெல்லும் வாழ்க்கை அமையும் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.நடராஜரை வழிபட்டு நலன்களை பெறுவோம் –  நமச்சிவாயா –

author avatar
kavitha