கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் என்.ராதாகிருஷ்ணன் நாயர் பதவியில் இருந்து நீக்கம்!

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும், மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கம். 

மறைந்த மலையாள நடிகர் கலாபவன் மணியின் சகோதரரும் மோகினியாட்டம் நடனக் கலைஞருமான ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன், கேரள சங்கீதா நாடக அகாடமியின் செயலாளராக பணியாற்றி வருகிறார். அக்டோபர் 3 ஆம் தேதி, ஆர்.எல்.வி.ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கு முயன்றார் மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் குணமடைந்து வீடு திரும்பினார்.

இவர் தன் முகநூல் பக்கத்தில், நிதி ரீதியாக பின்தங்கிய கலைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படுவதைக் காரணம் காட்டி அகாடமி தனக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பை மறுத்ததாகக் குற்றம் சாட்டி இருந்தார். இந்த விவகாரங்கள் தொடர்பாக, ராதாகிருஷ்ணன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்காக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற நிலையில், அகாடமியின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்ட கேரள சாகித்ய அகாடமியின் செயலாளர் கே.பி. மோகனன் அவர்கள் கூறுகையில், ராதாகிருஷ்ணன் அவரது உடல்நிலை காரணமாக தற்காலிகமாக நீக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.