மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி!

மதுராந்தகம் அருகே மர்மமான முறையில் உயிரிழந்த விவசாயி.

கடந்த சில காலங்களாகவே, விவசாயிகளின் மரணம்  நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. விவசாயத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவு விளைச்சல் இல்லாத பட்சத்தில், மனமுடைந்த விசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சுப்பிரமணி என்ற விவசாயி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். வயலுக்கு சென்ற விவசாயி, கிணற்றில் இறந்து கிடந்ததால், இதனை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, விவசாயி சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து, சித்தாமூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.